search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை"

    திலாஸ்பேட்டையில் காதலை தாய் கண்டித்ததால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டை வீமன்நகர் ஓடைத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி. இவர் புதுவை சட்டசபையில் தினக் கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகள் ராஜவேணி (வயது 21). இவர் பிளஸ்-2 படித்து விட்டு போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக பயிற்சிக்கும் சென்று வந்தார்.

    இதற்கிடையே ராஜவேணி ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் லட்சுமி கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ராஜவேணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றார். இதில் மயங்கி விழுந்த ராஜவேணியை அவரது தாய் மற்றும் உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜவேணி பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×